தெருவில் செல்வோரை விரட்டி சென்று கடிக்கும் தெரு நாய் 

0 749

திருவண்ணாமலை அருகே பத்துக்கும் மேற்பட்டோரை தெருநாய் கடித்த நிலையில் பலத்த காயமடைந்த ஐந்து பேருக்கு உள்நோயாளியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செய்யாறு அடுத்த கீழ்புதுப்பாக்கம் கிராமத்தில் உள்ள மாயாண்டிபுரம், அம்மன்கோயில் தெரு வழியாக நடந்து சென்றவர்களையும், இருசக்கர வாகனத்தில் வந்தவர்களையும் தெருநாய் ஒன்று துரத்தி சென்று கடித்துள்ளது.

அதில் பலத்த காயமடைந்த ஐந்து பேருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2 மணி நேரத்தில் பத்துக்கும் மேற்பட்டோரை தெரு நாய் கடித்ததால் அச்சமடைந்துள்ளதாக கூறும் அப்பகுதியினர், வெறிப்பிடித்த நாயை உடனடியாக பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments